செய்திகள் மலேசியா
ஈப்போ பெரிய மருத்துவமனையில் பூட்டிய காரில் பெண்ணின் சடலம்
ஈப்போ:
ஈப்போ பெரிய மருத்துவமனையின் கார் நிறுத்துமிடத்தில் பூட்டிய காரில் இருந்து
பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.
அப் பெண் 20 வயதுடையவராக இருக்கலாம் என்று பேரா தீயணைப்பு படையின் உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோர் அஹ்மத் கூறினார்.
ஈப்போவின் ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் கார் நிறுத்துமிடத்தில் இருந்த காரில் பெண் இருப்பதாக தகவல் கொடுக்கப்பட்டது.
மாலை 6.07 மணிக்கு சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து சென்றனர்.
அங்கு டொயோட்டா கெம்ரி காரில் பெண் ஒருவர் மயங்கி கிடந்தார்.
தீயணைப்பு வீரர்கள் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி காரின் கதவைத் திறந்தனர்.
காரில் இருந்த பெண்ணுக்கு சுகாதார அதிகாரியால் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்தனர். இறந்தவரின் சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm