நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவாக்கில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க தொழிலாளர் சட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்: ஸ்டீவன் சிம் 

கூச்சிங்:

சரவாக்கில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க தொழிலாளர் சட்டங்கள் ஒருங்கிணைப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

தீபகற்ப மலேசியாவில் அமலில் உள்ள வேலை வாய்ப்புச் சட்டம் 1955 (திருத்தம்) 2022 உடன் சரவா தொழிலாளர் சட்டத்தை ஒருங்கிணைக்க சரவா அரசாங்கத்திற்கு உதவ மனிதவள அமைச்சு தயாராக உள்ளது.

தொழிலாளர்களின் உரிமைகள் தீபகற்ப மலேசியாவுடன் ஒத்துப்போகாத பல பிரச்சனைகள் காரணமாக சரவா தொழிலாளர் கட்டளைச் சட்டம் திருத்தப்பட வேண்டும்.

மனிதவள அமைச்சும் சரவா அரசாங்கமும் தற்போது சரவா தொழிலாளர் சட்டத்தை திருத்துவதற்கான முயற்சிகள் குறித்து விவாத கட்டத்தில் உள்ளன.

இதன் மூலம் சரவா தொழிலாளர் சட்டத்தில் திருத்தத்தை விரைவில் செயல்படுத்துவதற்கான உடன்பாட்டை எட்ட முடியும் என்று நான் நம்புகிறேன்.

சரவாக்கில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பேசிய அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset