நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

3 மாநில கெஅடிலான் தலைவர்களை பிரதமர் சந்தித்தார்

பட்டர்வொர்த்:

பினாங்கு, கெடா, பெர்லிஸ் ஆகிய 3 மாநிலங்களின் கெஅடிலான் தலைவர்களை பிரதமர் டத்தோஶ்ரீ  அன்வார் இப்ராஹிம் சந்தித்தார்.

பட்டர்வொர்த்தில் உள்ள ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 

இக் கூட்டத்தில் பிரதமருடன் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில், கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் ஆகியோரும் உடன் இருந்தனர்.

பிரதமர் அன்வார் மாநில வாரியாக தனித்தனியாக கூட்டத்தை நடத்தி நாட்டின் நிலவரத்தையும் கள நிலவரங்களையும் கேட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.

ஆனால்  சம்பந்தப்பட்ட கூட்டங்கள் பற்றிய விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset