செய்திகள் மலேசியா
ஜொகூர் ஆட்சிக் குழு மறுசீரமைப்பில் அம்னோ தொகுதி தலைவர்கள் அதிருப்தி
ஜொகூர்பாரு:
ஜொகூர் ஆட்சிக் குழு மறுசீரமைப்பால்
பல அம்னோ தொகுதித் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஜொகூர் மாநில ஆட்சிக் குழு மறு சீரமைப்பை ஜொகூர் மந்திரி புசார் ஓன் ஹஃபிஸ் காஸி அறிவித்தார்.
இந்த மறுசீரமைப்பில் அந்தந்த பிரிவுகளுக்குத் தலைமை தாங்கும் அதிகமான கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கியிருக்க வேண்டும்.
குறிப்பாக தகுதியானவர்களுக்கு மாநில நிர்வாகத்தில் உரிய பங்களிப்பு வழங்காமல் புறக்கணிக்கப்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத தொகுதி தலைவர்கள் கூறியுள்ளனர்.
மாநிலத்தில் எந்தப் பதவியும் வகிக்காத ஆட்சிக் குழு உறுப்பினர்களை விலக்க வேண்டும் என்று பிரிவுத் தலைவர்கள் மாநில நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக ஆதாரம் கூறியது.
இருப்பினும் புதிய வரிசை அறிவிக்கப்பட்டபோது அது நடக்கவில்லை என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm
சிலாங்கூரில் அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்: அமிரூடின் ஷாரி
May 3, 2024, 1:16 pm
60%-க்கும் அதிகமான வணிகக் குற்ற இழப்புகள் அதிகரிப்பு: ரம்லி முஹம்மத் யூசோப்
May 3, 2024, 1:15 pm