நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாசீர் பூத்தே சந்தையில் தீ விபத்து

ஈப்போ:

பாசீர் பூத்தேவிலுள்ள காய்கறி சந்தையில் நேற்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. 

இந்தத் தீ விபத்தால் 90% காய்கறி சந்தை எரிந்து நாசமானது.

செவ்வாய்கிழமை நள்ளிரவு 12.20 மணியளவில் தீ பற்றிய செய்தி தமது தரப்புக்குக் கிடைத்ததாக ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹோவர்ட் லீ கூறினார். 

மேலும், அங்குள்ள தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பணியாளர்களிடம் இருந்து தகவலைப் பெற, சட்டமன்ற உறுப்பினர் கோ சீ ஹுவா மற்றும் கவுன்சிலர் ஜெய்டன் லிம் ஆகியோருடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக லீ கூறினார்.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தங்களால் இயன்ற முயற்சி செய்த போதிலும், சந்தையில் சுமார் 80% தீப்பிடித்து எரிந்தது.

ஒன்பது தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் உட்பட 60 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் இருந்தனர். 

சுமார் இரண்டு மணி நேரம் போராடி அதிகாலை 1.50 மணியளவில் தீயை அணைத்தனர் என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

- அஸ்வினி  செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset