நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செராஸ்  தீ விபத்துக்கு மின்சார இணைப்பில் ஏற்பட்ட கோளாறே காரணம்

கோலாலம்பூர்:

செராஸ் ஶ்ரீ சபா குடியிருப்பின் தீ விபத்துக்கு மின்சார இணைப்பில்  ஏற்பட்ட கோளாறே முக்கிய காரணமாக இருந்துள்ளது.

கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புத் துறை இயக்குனர் முஹம்மது சலே அப்துல் இதனை உறுதிப்படுத்தினார்.

செராஸ் ஶ்ரீ சபா அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 வீடுகள் எரிந்து சாம்பலானது.

இத்தீ விபத்தின் காரணத்தை கண்டுபிடிக்கும் நோக்கில் தடவியல் சோதனைகள் நடத்தப்பட்டது.

இச்சோதனையின் முடிவில் 17ஆவது மாடியின் ஓர்  வீட்டில் ஏற்பட்ட மின்சார இணைப்பில் ஏற்பட்ட கோளாறே காரணம்.

இதன் மூலம் தற்போது 95 சதவீத விசாரணையை  முடித்துவிட்டோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset