நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மூடா கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகியதில் வருத்தமில்லை: சைட் சாடிக்

கோலாலம்பூர்:

மூடா கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகியதில் எந்த வருத்தமும் எனக்கு இல்லை என்று அக் கட்சியின் முன்னாள் தலைவர் சைட் சாடிக் கூறினார்.

முன்னாள் சட்டத் துறை அமைச்சர் ஜைட் இப்ராஹிம் தொகுத்து வழங்கும் போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து மூடா கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினேன்.

அக் கட்சி தன்னைச் சார்ந்து இருப்பதை விரும்பாததால் தான் நிறுவிய கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

அது அரசியல் ரீதியாக நல்லதா அல்லது யதார்த்தமானதா அல்லது  அப்பாவித்தனமா? அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

ஆனால் நான் இளமையாக இருக்கிறேன். எனக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது.

இதனால் இது என் அரசியல்  வாழ்க்கையை முடித்துவிடும் என்று விதிக்கப்பட்டால் அதையும் நான் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset