நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜோகூர் பாருவில் 3 மூன்று அரசு அலுவலகங்களுக்கு  வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சல்கள் வந்தன

ஜொகூர்பாரு:

ஜொகூர்பாரு  பகுதியில் உள்ள 3 அரசு அலுவலகங்களுக்கு இன்று ஒரே நபரிடம் இருந்து வெடிகுண்டு மிரட்டல் அடங்கிய மின்னஞ்சல் வந்ததது.

இதை ஜொகூர்பாரு செலாத்தான் போலீஸ் தலைவர் ரவூப் செலாமாட் உறுதி செய்தார்.

இந்த மூன்று அரசு அலுவலகங்களுக்கும் கிடைத்த மின்னஞ்சல்கள் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாக நம்பப்படுகிறது.

இம்மூன்று அரசு அலுவலகங்களில் புக்கிட் சென்சூமில் உள்ள ஜொகூர்பாரு மாநகர் மன்ற தலைமையகமும் அடங்கும்.

ஜொகூர் பாரு மாவட்டத்தில் இதுவரை ஒரே மின்னஞ்சலைப் பெற்றதாக மூன்று போலீஸ் புகார்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்திலிருந்து எங்களுக்கு வந்துள்ளன.

இன்று மெனாரா எம்பிஜேபியில் பாதுகாப்பு ஆய்வுக்கு தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset