நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2023-ஆம் ஆண்டு  விபத்துக்களால் 6,080 மரணச் சம்பவங்கள் பதிவு 

கோலாலம்பூர்: 

நாட்டில் 2023-ஆம் ஆண்டு முழுவதும் விபத்துக்களால்  6,080 மரணச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஒரு நாளில் சுமார் 17 முதல் 18 இறப்புகள் பதிவாகியுள்ளன எனச் சாலைப் போக்குவரத்துத் துறையின் அமலாக்கப் பிரிவின் மூத்த இயக்குநர் டத்தோ லோக்மான் ஜமான் கூறினார்.

இந்தப் பிரச்சனை தீவிரமானது. 

மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களால் 68 முதல் 70 விழுக்காடு சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார். 

சாலை விபத்துகளின் விழுக்காட்டைக் குறைப்பதற்காக, தேசியக் காவல்துறையின புலனாய்வு மற்றும் போக்குவரத்து மேலாண்மைத் துறை போன்ற பல்வேறு நிறுவனங்களுடன் ஒத்துழைத்து பயனர்களுக்கு விழிப்புணர்வு வழங்குவது உட்படபல்வேறு முயற்சிகள் அவரது தரப்பால் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset