செய்திகள் மலேசியா
சீனப் புத்தாண்டை முன்னிட்டு இரு நாட்களுக்கு இலவச டோல் சேவை
பெட்டாலிங் ஜெயா:
சீனப் புத்தாண்டை முன்னிட்டு தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்பவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு இலவச டோல் சேவை வழங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி அறிவித்துள்ளார்.
வியாழக்கிழமை பிப்ரவரி 8 ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணி தொடங்கி வெள்ளிக்கிழமை பிப்ரவரி 9-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை அனைத்து வாகன வகுப்புகளுக்கும் இலவச டோல் சேவை வழங்கப்படும்.
ஜொகூர் சுல்தான் இஸ்கண்டார் மற்றும் லிங்கேடுவா எக்ஸ்பிரஸ்வே ஆகிய இரு நெடுஞ்சாலைகளைத் தவிர மற்ற அனைத்து நெடுஞ்சாலைகளில் இலவச டோல் சேவை செயல்படுத்தப்படும்.
இந்த இலவச டோல் சேவை மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கவும் நோக்கில் வழங்கப்படுகின்றது.
இந்த இலவச டோல் சேவையின் மதிப்பு 42.99 மில்லியன் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி ஒர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இலவச டோல் சேவையை முன்னிட்டு நெடுஞ்சாலைப் பயனர்கள் தங்கள் பயணங்களைச் சிறப்பாகத் திட்டமிடுவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm