நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ராவின் நிலைப்பாடு குறித்து உடனடியாக முடிவெடுங்கள்: அரசுக்கு வலியுறுத்து

கோலாலம்பூர்:

மித்ராவின் நிலைப்பாடு குறித்து அரசாங்கம் உடனடியாக முடிவெடுக்க வேண்டும்.

மலேசிய இந்திய மக்கள் கட்சியின் துணைத் தலைவர் எஸ். சுப்பிரமணியம் கூறினார்.

பிரதமர் துறையின் கீழ் இருந்த மித்ராவை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் மாற்றினார்.

இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் மித்ராவின் நிலைப்பட்டை அமைச்சரவை மீண்டும் விவாதிக்கும்.

அது வரை அனைவரும் பொறுமை காக்க வேண்டும் என்று அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளரும் அமைச்சருமான ஃபாஹ்மி பாட்சில் கூறினார்.

ஒரு மாதத்திற்கு மேலாகியும், இது குறித்து எந்தவொரு அறிவிப்புகளும் வரவில்லை.

மானியத்திற்கு விண்ணப்பிக்க முடியுமா இல்லையா என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. 

எனவே, மித்ரா நிலையை உடனடியாக அறிவிக்குமாறு அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset