நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெண் மேலாளரை சீண்டிய அந்நிய நாட்டினர் தாக்கப்பட்டார்: 4 உணவக பணியாளர்கள் கைது

கோலாலம்பூர்:

பெண் மேலாளரை சீண்டிய அந்நிய நாட்டினர் கடுமையாக தாக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தில் 4 உணவக பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர் என்று டாங் வாங்கி போலீஸ் தலைவர் நோர் டெல்ஹான் யாஹ்யா கூறினார்.

தலைநகர் ஜாலான் புக்கிட் பிந்தாங்கில் உள்ள உணவகத்தின் முன்புறம் நடந்த சண்டை தொடர்பான வீடியோ பதிவுகள் சமூக வலைத் தளங்களில் வைரலானது.

இந்த சம்பவம் தொடர்பில் நான்கு உணவக பணியாளர்கள் உட்பட ஐவரை போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்கள் அனைவரும் 20 முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.

உணவகத்தில் இருந்த மேலாளரை சீண்டியதால் இந்த கைகலப்பு நடத்ததாக விசாரணையில் தெரிய வந்தது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset