நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரங்காடியில் உள்ள நகைக் கடையில் கொள்ளை: தலைக்கவசம் அணிந்த கும்பல் கைவரிசை

சிப்பாங்:

பேரங்காடியில் தலைக்கவசத்துடன் நுழைந்த மூவர் கொண்ட கும்பல் அங்குள்ள நகைக் கடையில் கொள்ளையடித்துள்ளது.

இந்த சம்பவம் சிப்பாங் கோத்தா வாரிசானில் உள்ள பேரங்காடியில் நிகழ்ந்தது.

இரவு நேரத்தில் அப்பேரங்காடிக்கும் நுழைந்த அம்மூவரும் நகைக்கடையில் கொள்ளையடித்து தப்பியோடினர்.

இந்த சம்பவத்தை பல வீடியோவாக படிவு செய்யப்பட்டது.

அதே வேளையில் இந்த சம்பவம் குறித்து இரவு 8.15 மணிக்கு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இச்சம்பவத்தின் விசாரணை அறிக்கை சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமான் கானிடம் ஒப்படைக்கப்பட்டது.

இக்கொள்ளை சம்பவம் குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்று சிப்பாங் போலீஸ் தலைவர் வான் கமாருல் அஸ்ரான் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset