நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பணி நீக்கம் செய்யப்படுவீர்கள் என மிரட்டப்பட்ட ஆசிரியர் பணி ஓய்வு

கோம்பாக்:

பணி நீக்கம் செய்யப்படுவீர்கள் என மிரட்டப்பட்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தற்போது ஓய்வு பெற்றார்.

ஆசிரியர் ஃபாட்லி சாலே கோம்பாக் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

41 வயதான அந்த ஆசிரியர் கணிதப் பாடத்தின் போதனை முறைகள் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதே வேளையில் மாணவர்கள் பாரமான புத்தகப் பை கொண்டு வருவதும் குறித்தும் அதிருதியை வெளிப்படுத்தினார்.

இதனால் கல்வியமைச்சின் ஒழுங்கு நடவடிக்கை பிரிவிடம் இருந்து கடிதம் ஒன்றை அவர் பெற்றுள்ளார்.

இந்நிலை நீடித்தால் பணி நீக்கம் செய்யப்படுவீர்கள் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் முன்கூட்டியே பணி ஓய்வு பெற்று விட்டார்.

கல்வி அமைச்சு  அதிகமாக கவனித்து வருவதால், முன்கூட்டியே ஓய்வு பெறுவதைத் தேர்ந்தெடுத்ததாக அவர்  கூறினார்.

எவ்வாறாயினும், கல்வித் துறையில் தான் தொடர்ந்து இருப்பேன்.

அது தொடர்பான பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து பேசுவேன் என்றும் ஃபாட்லி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset