நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாயிஃப் மஹ்முட் கடத்தப்பட்டதாக கூறும் புகாரை போலீசார்  உறுதிப்படுத்தினர்

கூச்சிங்:

தாயிஃப் மஹ்முட் கடத்தப்பட்டதாக கூறப்படும் புகாரை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சரவாக் முன்னாள் ஆளுநர் துன் தாயிஃப் மஹ்முட் கூச்சிங்கில் உள்ள நார்மா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

அப்போது அவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர் ஒருவர், மருத்துவமனை பணியாளர்களுக்கு தெரிவிக்காமல்   உடலில் பொருத்தப்பட்டிருந்த அனைத்து மருத்துவ உபகரணங்களையும் அகற்றியுள்ளார்.

பின்னார் தாயிஃப்பை சக்கர நாற்காலியில் அமர வைத்து மருத்துவமனைக்கு வெளியே கொண்டு சென்று வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.

இந்த சம்பவத்திம் அடிப்படையில் தாயிஃபின் மற்றொரு குடும்ப உறுப்பினர் போலீசில் புகார் செய்தார்.

இப்புகாரின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக சரவா போலீஸ் தலைவர் மன்சா ஹதா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset