செய்திகள் மலேசியா
பண்டார் துன் ரசாக்கில் 1,100 பேருக்கு சீனப் பெருநாள் அன்பளிப்பு
கோலாலம்பூர்:
பண்டார் துன் ரசாக் நாடாளுமன்றத் தொகுதில் 1,100 பேருக்கு சீனப் பெருநாள் அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.
பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ வான் அஸிசா இந்த அன்பளிப்புகளை வழங்கினார்.
பண்டார் துன் ரசாக்கில் வசிக்கும் ஏழைகள், குறிப்பாக நகர்ப்புற ஏழைகளின் வாழ்க்கைச் செலவை எளிதாக்கும் நோக்கில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்த வட்டாரத்தில் நகர்ப்புற ஏழைகளையும், ஒப்பீட்டளவில் அதிக எண்ணிக்கையிலான முதியவர்களையும் கொண்டுள்ளார்.
எனவே நாங்கள் யாரையும் உதவி பெறுவதில் இருந்து பின்தள்ளாமல் இருக்க முயற்சிக்கிறோம்.
இன்று நன்கொடைகளைப் பெற்ற குடியிருப்பாளர்கள் உதவி தேவைப்படுபவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விரைவில் கொண்டாடப்படும் சீனப் புத்தாண்டின் போது அவர்களின் சுமையை சிறிது குறைக்கும் என்று டத்தோஶ்ரீ வான் அஸிசா கூறினார்.
இந்நிகழ்வில் பிரதமரின் அரசியல் செயலாளரும், பண்டார் துன் ரசாக் பிகேஆர் தலைவருமான டத்தோ அஸ்மான் அபிடினும் கலந்து கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm