நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜீப்பிற்கு முழு மன்னிப்பு கிடைப்பதற்கான முயற்சிகள் தொடர வேண்டும்: டத்தோஶ்ரீ தனேந்திரன்

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப்பிற்கு முழு மன்னிப்பு கிடைப்பதற்கான முயற்சிகள் தொடர வேண்டும்.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ தனேந்திரன் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

அரச மன்னிப்பு வாரியத்தின் முடிவுக்கு பின் நஜீப்பை இன்று நீதிமன்றத்தில் சந்தித்தேன்.

உரிய நீதி இன்னும் கிடைக்காததால் அவர் ஏமாற்றமும் வருத்தமும்  அடைந்துள்ளார்.

நஜீப் வழக்கை முதல் நாளிலிருந்தே பின்பற்றி வருகிறேன். 

அந்த வழக்கில் அவருக்கு மிகப் பெரிய அநீதி இழைக்கப்பட்டது என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

இந்நிலையில் அரச மன்னிப்பு வாரியம் அவரின் தண்டனையை பாதியாக குறைத்துள்ளது.

மன்னிப்பு வாரியத்தின் முடிவுகளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

அதே வேளையில் நஜீப்பிற்கு முழு மன்னிப்பு பெறுவதற்கான முயற்சிகள் தொடர வேண்டும் என்று டத்தோஶ்ரீ  தனேந்திரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset