செய்திகள் மலேசியா
கிள்ளான் ஓர் அரச நகரமாகும்: சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அறிவிப்பு
கிள்ளான்:
சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா கிள்ளான் மாநகரை அரச நகரமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி முதல் கிள்ளான் ஒரு நகரமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இனி கிள்ளான் அரச மாநகர மன்றமாக அழைக்கப்படும்.
கிள்ளான் அரச மாநகர மன்றத்தின் தலைவராகயிருந்த டத்தின் படுக்கா நூராய்னி ரோஸ்லான் கிள்ளானின் முதல் மேயராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிள்ளான் அரச மாநகர மன்றம் சிறப்பான செயல்பாடுகளை வழங்குவதில் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்று அவர் நினைவூட்டினார்.
புகார் கிடைக்கும் காத்திருக்காமல் உடனடியாக விவாதித்து நடவடிக்கை எடுக்கப் பழக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், மேயர் மற்றும் நகர கவன்சிலர்கள் பிரச்சனையை தீர்க்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து, வெள்ளத்தைச் சமாளிப்பதற்கான திட்டங்களைத் திறம்பட செயல்படுத்துவதை உறுதிசெய்ய நிபுணர்களின் கருத்துகளைப் பெற வேண்டும் என்று சுல்தான் ஷராபுதீன் கேட்டுக் கொண்டார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm