நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தந்தை நஜீப்பை விடுவிக்கும் போராட்டத்தை கைவிட மாட்டோம்: நிசார்

பெக்கான்:

தந்தை நஜீப்பை விடுவிக்கும் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று டத்தோ முகமத் நிசார் நஜீப் கூறினார்.

சிறையில் அடைக்கப்பட்ட என் தந்தை அரச மன்னிப்பு கோரியிருந்தார். 

ஆனால் அவருக்கு அம்மன்னிப்பு வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக தண்டனைகள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து அரசியல் தலைவர்கள் உட்பட பல கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இருந்தாலும் இதுபோன்ற விவகாரங்களால் நாங்கள் கலங்க போவதில்லை.

என் தந்தை விடுவிக்கப்பட வேண்டும். அதற்கான போராட்டங்களும் முயற்சிகளும் தொடரும்.

மேலும் இந்த விவகாரத்தில் அம்னோ மேல்முறையீடு செய்யும் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக பகாங் ஆட்சிக் குழு உறுப்பினருமான நிசார் நஜீப் கூறினார்.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset