செய்திகள் மலேசியா
தடுப்பு முகாமில் இருந்து தப்பியோடிய மற்றொரு ஆடவர் விபத்தில் பலி
தாப்பா:
தடுப்பு முகாமில் இருந்து தப்பியோடிய மற்றொரு ஆடவர் விபத்தில் பலியாகினார்.
பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோஶ்ரீ முகமத் யுஸ்ரி ஹசான் பஸ்ரி உறுதிப்படுத்தினார்.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 332.5 கிலோ மீட்டரில் வாகனம் மோதி ஆடவர் பலியானார் என்ற தகவல் போலீசுக்கு கிடைத்தது.
உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.
சம்பந்தப்பட்ட ஆடவர் தலையில் பலத்த காயங்களுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
மரணமடைந்த ஆடவர் கடந்த வியாழக்கிழமை தடுப்பு முகாமில் இருந்து தப்பியோடியவர் என்பது கண்டறியப்பட்டது.
மரணமடைந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக தாப்பா மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm