நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊழலை எதிர்த்து போராடுவதற்கு மாமன்னரும் மலாய் ஆட்சியாளர்களும் முழு ஆதரவு: பிரதமர்

ரெம்பாவ்:

நாட்டில் ஊழலை ஒழித்து நல்லாட்சியை மேம்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளுக்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமும்   மலாய் ஆட்சியாளர்களும் முழுமையாக ஆதரவு வழங்குகின்றனர்.

இதனை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

ஊழலைக் கூட்டாக எதிர்த்துப் போராடவும், மற்ற நாடுகளுக்கு மலேசியாவை முன்மாதிரியாக மாற்றவும் அனைத்துத் தலைவர்கள், அரசு பணியாளர்களும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.

நேற்று மாட்சிமை தங்கிய மாமன்னருடன் சந்திப்பு நடந்தது.

ஆட்சியை மேம்படுத்தவும், ஊழலில் இருந்து நாட்டைத் தூய்மைப்படுத்தவும்  அரசாங்கத்தின் நடவடிக்கைகளை தாம் முழுமையாக ஆதரிப்பதாக மாமன்னர் கூறினார்.

இது ஒரு நல்ல வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன். 

சாத்தியமான சிறந்த சேவையை வழங்க அனைத்து அரசு ஊழியர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் பதவியைப் பயன்படுத்தி செல்வத்தைக் குவிப்பதை நாடு அனுமதிக்காது

இதுபோன்ற நடைமுறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset