நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூரில் கவுன்சிலர் நியமன விவகாரம்; பெருநாளுக்கு முன் தீர்வுக் காணப்படும்: அமிரூடின்

ஷாஆலம்:

சிலாங்கூரில் கவுன்சிலர்கள் நியமனம் தொடர்பான விவகாரத்திற்கு நோன்பு பெருநாளுக்கு முன் தீர்வு காணப்படும்.

மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி இதனை தெரிவித்தார்.

மாநிலத்தில் 20 கவுன்சிலர்கள் நியமன விவகாரம் தொடர்ந்து சர்ச்சையாக இருந்து வருகிறது.

குறிப்பாக இந்த 20 கவுன்சிலர்கள் பொறுப்பை அம்னோ புறக்கணித்துள்ளது.

இதனால் தான் இப்பிரச்சினை தொடர்ந்து இழுப்பறியாக இருந்து வருகிறது.

இப்பிரச்சினை தொடர்பில் அம்னோவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

ஆகவே நோன்பு பெருநாளுக்கு முன் இப்பிரச்சினைக்கு எல்லாம் சுமூகமாக தீர்வு காணப்படும் என்று அமிரூடின் ஷாரி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset