செய்திகள் மலேசியா
அரண்மனைக்கு முன் பேரணி: விசாரணை அறிக்கை துணை அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைப்பு
கோலாலம்பூர்:
அரண்மனைக்கு முன் நடந்த பேரணி தொடர்பான விசாரணை அறிக்கை துணை அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனை கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவூடின் அப்துல் மஜித் கூறினார்.
மலேசியர்களையும் நாட்டையும் காப்பாற்றுங்கள் என்ற பேரில் அண்மையில் அரண்மனையின் முன் பேரணி நடந்தது.
இந்த பேரணி குறித்து போலீசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
கிட்டத்தட்ட 20 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
விசாரணை அறிக்கை அனைத்தும் துணை அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் அடுத்த நடவடிக்கைக்காக அரசு வழக்கறிஞரின் முடிவுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm