நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிள்ளானில் அதிரடி சோதனை: 490 அந்நிய நாட்டினர் கைது

கிள்ளான்:

மினி டாக்கா என்று அழைக்கப்படும் கிள்ளானில் உள்ள ஜாலான் அமான் பெர்டானா குடியிருப்பில் போலீசார் கூட்டு சோதனை  நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்த நடவடிக்கையில் ஆவணமற்ற 490 சட்டவிரோட அந்நிய  நாட்டினரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

புக்கிட் அமான் சூதாட்ட, இரகசிய கும்பல் பிரிவு, பொது சோதனை நடவடிக்கை குழு, சிலாங்கூர் குடிநுழைவு துறை ஆகியவை இணைந்து இந்த சோதனையில் ஈடுப்பட்டனர்.

அதிகாலை 2.30 மணியளவில் சம்பந்தப்பட்ட ஐந்து மாடி குடியிருப்பில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அருகிலுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் வெளிநாட்டுத் தொழிலாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதைக் இந்த சோதனையில் கண்டறியப்பட்டது.

அதே வேளையில் பலர் இங்கு சொந்தமாக கடைகளை வைத்து நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையின் போது கிட்டத்தட்ட 490 அந்நிய நாட்டினர் கைது செய்யப்பட்டனர். பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று சிலாங்கூர் குடிநுழைவு துறை கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

+ - reset