செய்திகள் மலேசியா
பினாங்கில் தண்ணீர் கட்டணம் இரு மடங்கு உயர்வு
ஜார்ஜ் டவுன்:
பினாங்கில் தண்ணீர் கட்டணம் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் இரு மடங்காக உயரும் என்று அம்மாநில முதல்வர் சாவ் கோன் இயோவ் தெரிவித்துள்ளார்.
மாதத்திற்கு 20 கன மீட்டர் தண்ணீரைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு, முந்தைய விகிதமான 22 காசுகளுடன் ஒப்பிடும்போது, ஒரு மீட்டருக்கு 50 காசுகள் வசூலிக்கப்படும்.
இதற்கிடையில், மாதத்திற்கு 20 முதல் 35 கன மீட்டர் தண்ணீரைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு ஒரு கன மீட்டருக்கு RM1.10 வசூலிக்கப்படும்.
அதே சமயம், 35 கன மீட்டருக்கும் அதிகமாகப் பயன்படுத்துபவர்களிடம்ஒரு கன மீட்டருக்கு RM 2 வசூலிக்கப்படும்.
எவ்வாறாயினும், ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் எட்டு நபர்களை உள்ளடக்கிய குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இக்கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் சோவ் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm