செய்திகள் மலேசியா
ஸ்ரீ பென்தாஸ் நிலையத்திற்கு மாமன்னர் தம்பதி சிறப்பு வருகை
கோலாலம்பூர்:
மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா அவர்தம் துணைவியார் துங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர் ஸ்ரீ பென்தாஸ் நிலையத்திற்கு சிறப்பு வருகை மேற்கொண்டனர்.
இன்று காலை 10.30 மணியளவில் மீடியா ப்ரிமா பெர்ஹாட் (MPB) தலைமை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மாமன்னர் தம்பதியை வரவேற்றனர்.
மாமன்னர் தம்பதிக்கு மீடியா ப்ரிமா பெர்ஹாட்டின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதுடன் வானொலி மற்றும் செய்தி ஒளிப்பதிவு செய்யும் அரங்கையும் அவர்கள் பார்வையிட்டனர்.
செய்தி ஒளிப்பதிவு செய்யும் அரங்கில் மாமன்னர் தம்பதி செய்தியை வாசிப்பது பதிவு செய்யப்பட்டது.
இந்தச் சிறப்பு செய்தி இன்று இரவு 8 மணிக்கு டிவி 3 அலைவரிசையில் ஒளிப்பரப்பப்படவுள்ளது.
அனைத்து மலேசியர்களுக்கும் வெளிப்படைத்தன்மையுடன் செய்திகளையும் தகவல்களையும் வழங்க ஊடக பயிற்சியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதையும் எப்போது அரசு உறுதி செய்யும் என்றும் மாமன்னர் தெரிவித்துள்ளார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm