நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரோஸ்மாவுக்கு எதிராக நகைக்கடைக்காரர் தொடுத்த வழக்கிற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை: போலீஸ்

கோலாலம்பூர்:

ரோஸ்மா மீது லெப்னான் நகைக்கடைக்காரர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கிற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை என்று புக்கிட் அமான் பணமோசடி தடுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநர் ஃபூ வெய் மின் கூறினார்.

லெபனான் நகைக்கடை நிறுவனமான குளோபல் ராயல்டி டிரேடிங், ரோஸ்மாவிடம் இருந்து 14.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை மீட்டுத் தரக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் அரசாங்கத்தை ஒரு தரப்பாகச் சேர்க்க முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பின் மனைவி ரோஸ்மா மன்சூர் விண்ணப்பம் செய்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அரசாங்கத்திற்கு எதிரான ரோஸ்மாவின் கூற்றுக்கு எந்த அடிப்படையும் இல்லை.

ஆகயே அவரின் மனு நிராகரிக்கப்பட வேண்டும் என ஃபூ வெய் மின் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset