நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களுக்கு மத்தியிலான ஒற்றுமை நிகழ்வுகள் அதிகரிக்கப்பட வேண்டும்: கணபதிராவ்

புத்ராஜெயா:

மக்களுக்கு மத்தியிலான ஒற்றுமை நிகழ்வுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதி ராவ் கூறினார்.

தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் ஏரன் அகோ டகாங்கை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த சந்திப்பின் போது பல்வேறு இனங்கள், மதங்களைச் சேர்ந்த சமூகங்களுக்கிடையில் நிலவும் நல்லிணக்கம் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இனங்களுக்கிடையேயான ஒற்றுமை நிகழ்ச்சிகளுக்கான பல பரிந்துரைகளை அமைச்சரிடம் பரிந்துரைத்துள்ளேன்.

ஏற்கனவே கிள்ளான் பகுதியைப் பற்றிய சிறப்புத் திட்டங்களையும் விரிவான தகவல்களையும் கொண்டுள்ள அமைச்சரால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.

அதன் அடிப்படையில் கிள்ளான் பகுதி மக்களின் நலனுக்காக நடத்தப்படக்கூடிய சில நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளப்படும் என தாம் நம்புவதாக கணபதிராவ் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset