செய்திகள் மலேசியா
பெருவாஸ் எம்.பி வீட்டில் தீ; பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம்
பெருவாஸ்:
பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரான ஙே கூ ஹாம் வீட்டில் திடீரென்று தீ ஏற்பட்டது. இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீ சம்பவம் குறித்து காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். இந்த சம்பவம் என்பது பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸ் சந்தேகிப்பதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.
பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், தீ சம்பவம் குறித்து நேரில் பார்த்தவர்கள் யாராக இருந்தாலும் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க முன்வரலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, அதிகாலை 2.50 மணிக்கு நிகழ்ந்த இந்த தீ சம்பவத்தில் எந்தவொரு உயிர் சேதங்களும் நிகழவில்லை. மாறாக, மெர்சிடிஸ் ஈ 300 ரக கார் 80 விழுக்காடு வரை தீக்கிரையாகியது.
மற்ற இரு கார்களான சிஆர்வி, மற்றும் ஹைலக்ஸ் ஆகிய கார்கள் பாதிக்கப்பட்டன.இந்த தீ சம்பவத்தை DAP கடுமையாக கருதுவதாக அக்கட்சியின் தலைமை செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm