நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் வெள்ளம் ஏற்பட்டாலும் எஸ்பிஎம் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்

புத்ராஜெயா:

ஜொகூர் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டாலும் எஸ்பிஎம் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்.

கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் இதனை உறுதிப்படுத்தினார்.

எஸ்பிஎம் தேர்வு வரும் திங்கட்கிழமை முதல் மார்ச் 7ஆம் தேதி  வரை நடைபெறவுள்ளது.

ஜொகூர் மாநிலத்தில் தற்போது  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் இந்த தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும்.

குறிப்பாக திட்டமிட்ட தேதிகளின் படி இந்த தேர்வு தொடரும் என்று அவர் கூறினார்.

எஸ்பிஎம் தேர்வு எழுதுபவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக வெள்ளம், வெள்ளத்திற்குப் பிந்தைய ஏற்பாடுகள் தொடர்பாக மலேசிய தேர்வு வாரியம், மாநில கல்வித் துறைகளுடன் அமைச்சகம் இணைந்து செயல்படும்.

வெள்ள காலங்களில் எஸ்பிஎம் மாணவர்களை நிர்வகிப்பதற்கு அமைச்சு  பழகிவிட்டது. 

வெள்ளத்தால் அவர்கள் துண்டிக்கப்பட்டாலும், தேர்வு மையங்களுக்கு அழைத்துச் செல்ல மற்ற அரசு நிறுவனங்களின் ஆதரவையும் உதவியையும் பெறுவோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset