செய்திகள் மலேசியா
குடியிருப்பாளர்களின் கோரிக்கை ஏற்பு எங்களின் முதல் வெற்றி: மௌர்னா
ஷாஆலம்:
குடியிருப்பாளர்களின் கோரிக்கை ஏற்பு எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று பெர்சத்து கட்சியின் சயாப் பிரிவைச் சேர்ந்த மௌர்னா கூறினார்.
சுபாங் கம்போங் பூங்கா ராயா மக்களின் பிரச்சினை அனைவரும் அறிந்தது.
அவர்கள் தங்கியிருக்கும் நிலம் மேம்பாட்டு நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.
சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனம் நீதிமன்ற வழக்கில் வெற்றி பெற்றதால் குடியிருப்பாளர்கள் அவ்விடத்தை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் எங்களின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடுவின் பார்வைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
இன்று அவருடனான சந்திப்பின் போது மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவும் அவரிடம் வழங்கப்பட்டது.
தற்காலிகமாக அம்மக்களுக்கு வாடகை வீடுகள், அதன் சிலாங்கூர் கூ வீடுகள் பெற்று தருவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்று பாப்பாராயுடு கூறினார்.
மக்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.
அதே வேளையில் இம்மக்களின் பிரச்சினைக்கு முழு தீர்வு கிடைக்கும் என தாம் நம்புவதாக மோகனா கூறினார்.
இதனிடையே எங்களின் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வாக சிலாங்கூர் கூ வீடுகள் வழங்கப்படும். இந்த வீடுகளை நாங்கள் வாங்க வேண்டும்.
இருந்தாலும் இந்த விவகாரம் குறித்து எழுத்துப்பூர்வமாக கடிதம் கிடத்தால் நல்லது என்று அக்குடியிருப்பு நடவடிக்கை குழு தலைவர் கணேசன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm