நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிலைத் தன்மையான சேவைக்கே கட்டண உயர்வு; நீர் நிறுவனங்களுக்குப் பயனில்லை: ஸ்பான்

கோலாலம்பூர்:

நாட்டில் நிலைத் தன்மையான நீர் சேவையை வழங்கும் நோக்கில் அதன் கட்டண உயர்வு குறித்து ஆராயப்படுகிறது.

இந்த கட்டண உயர்வு நீர் நிறுவனங்களிக்கு பயனில்லை என்று ஸ்பான் பொது தொடர்பு விவகாரப் பிரிவு இயக்குநர் முகமத் பாசில் இஸ்மாயில் கூறினார்.

இந்த ஆண்டு தண்ணீர் கட்டணம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறதும்

இந்த தண்ணீர் கட்டணங்களை சரி செய்வது சேவைகளின் நிலைத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது

ஆனால் இது நீர் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவதற்கான நோக்கம் அல்ல.

நீர் நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் இருவருக்கும் நியாயமான கட்டண சரி செய்தலை உறுதி செய்வதற்காக ஸ்பான் ஒரு கட்டண நிர்ணய ஆய்வை நடத்தியதாக அவர் கூறினார்.

நிறுவனத்தின் இயக்கச் செலவுகள், மூலதனச் செலவுகள் ஆகியவற்றை இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் செயல்படுத்தப்பட வேண்டிய கட்டண விகிதத்தை ஸ்பான் நிர்ணயித்துள்ளதும்

இதை ஆபரேட்டர் நிர்ணயிக்கவில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset