நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ளத்தால் பாதிப்பட்ட எஸ்பிஎம் மாணவர்களை மாவட்ட மன்ற அதிகாரிகள்  ஒருங்கிணைக்க வேண்டும்

ஜொகூர்பாரு:

ஜொகூரில் வெள்ளத்தால் பாதிப்பட்ட எஸ்பிஎம் மாணவர்களை மாவட்ட மன்ற அதிகாரிகள்  ஒருங்கிணைக்க வேண்டும்.

மாநில மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி இதனை வலியுறுத்தினார்.

தொடர் கனமழையை தொடர்ந்து ஜொகூர் மாநிலத்தில் வெள்ள பேரிடர் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலை இன்னும் மோசமடையலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நேரத்தில் அடுத்த வாரம் எஸ்பிஎம் தேர்வு நடைபெற்வுள்ளது. வெள்ளத்தால் இந்த தேர்வை மாணவர்கள்  தவறவிடக்கூடாது.

வெள்ளம் தேர்வுகளைப் பாதிக்கும் என்பது புதிதல்ல. 

முந்தைய ஆண்டுகளில் பள்ளிகள் வெள்ள நிவாரண மையங்களாக பயன்படுத்தப்பட்டன. 

இருப்பினும், மாவட்ட அதிகாரிகள் தங்கள் ஞானத்தைப் பயன்படுத்தி செயல்பாட்டுப் பணிகளைச் சரியாகச் செயல்படுத்த முடியும்.

அதற்கான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset