நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடிபோதையில் ஏடிஎம் வாசலில் படுத்திருந்த குடிமகன் ஷட்டரில் சிக்கி பலி

கோத்தா கமுனிங்:

வங்கி ஏடிஎம் அறையின் ஷட்டரில் சிக்கிய ஆடவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக மரணமடைந்தார்.

இந்த சம்பவம் கோத்தா கமுனிங்கில் உள்ள வங்கியில் நள்ளிரவில் நிகழ்ந்தது.

இன்று காலை வங்கியின் ஏடிஎம் அறையின் நுழைவாயிலில் அந்த நபர் குடிபோதையில் மயங்கிய நிலையில் கிடந்ததை வழிப்போக்கர்கள் கண்டனர்.

இதை தொடர்ந்து இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

குடிபோதையில் இருந்த நபர், வங்கியின் ஏடிஎம் நுழைவாயிலில் தலை வைத்து படுத்துள்ளார்.

நள்ளிரவு 12.01 மணிக்கு அதன் ஷட்டர் தானாக மூடப்பட்டபோது  அவரின் கழுத்து பகுதி அதில் சிக்கிக் கொண்டது,

காலை 6 மணிக்கு அந்த ஷட்டர் தானாகவே திறந்துள்ளது.

ஷட்டரில் கழுத்து சிக்கிக் கொண்டதால் அவர் மரணமடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

மரணமடைந்தவருக்கு 50 அல்லது 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்கலாம் என்று ஷாஆலம் போலீஸ் தலைவர் இக்பால் இப்ராஹிம் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset