நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிப்பு

புத்ராஜெயா:

வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட 14 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

இதனை சுகாதார அமைச்சர் சூல்கிஃப்ளி அஹ்மத் உறுதிப்படுத்தினார்.

நாட்டில் பெய்து வரும் கனமழையால் பல மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது நிவாரண மையங்களில் தங்கி உள்ளனர்.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளந்தான் மாநிலத்தில் ஆக அதிகமாக 9 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

திரெங்கானுவின் 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 12 பேருக்கு லேசான அறிகுறிகள் உள்ளன. அவர்களுக்கு நிவாரண மையங்களில் அல்லது வீட்டில் சிகிச்சை அளிக்கப்படுகின்றன.

இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படுவதால் அவர்கள் அங்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset