செய்திகள் மலேசியா
இஸ்லாமிய சமய விவகாரங்களில் முஸ்லிம் அல்லாதார் தலையிட வேண்டாம்: சிலாங்கூர் சுல்தான்
ஷாஆலம்:
நாட்டில் முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாம் தொடர்பான விஷயங்களில் தலையிடாமல், அதன் கொள்கைகளை மதிக்க வேண்டும்.
தேசிய இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான வாரியத்தின் தலைவரான சுல்தான் ஷராஃபுடின் இத்ரிஸ் ஷா இதனை நினைவூட்டினார்.
முஸ்லிம் அல்லாத நிபுணர்களை சிறப்புக் குழுவில் சேர்க்குமாறு அரசாங்கத்திற்கு பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ங்கா கூ ஹாம் கோரிக்கையை முன்வைத்து உள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் சிலாங்கூர் சுல்தான் வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.
இஸ்லாமிய சட்டங்களை இயற்றுவதில் மாநில சட்டமன்றத்தின் விதிகளை படித்து புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம் சமூகம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் மேற்பார்வையிடும் பொறுப்பு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த வாரியம் பல்வேறு துறைகளில் குறிப்பாக இஸ்லாமிய சட்டம், மார்க்கம் சம்பந்தப்பட்ட நிபுணர்களை உள்ளடக்கியது என்றும் சுல்தான் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm