நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முகவரால் ஏமாற்றப்பட்ட அந்நிய தொழிலாளர்களுக்கு மனிதவள அமைச்சு உதவும்: ஸ்டீவன் சிம்

புத்ராஜெயா:

முகவர்களால் ஏமாற்றப்பட்டதாகக் கூறப்படும் 100க்கும் மேற்ப்பட்ட வங்காளதேச தொழிலாளர்களுக்கு மனிதவள அமைச்சு உதவும்.

இதனை அமைச்சர் ஸ்டீவன் சிம் உறுதிப்படுத்தினார்.

கைது செய்யப்பட்ட 171 அந்நிய தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு, அமைச்சின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது.

இருந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் வங்கதேச தொழிலாளர்களுக்கு அமைச்சு உதவும்.

மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய நிறுவனத்தையும் அமைச்சு விசாரணைக்கு அழைக்கும் என்று அவர் கூறினார்.

வங்காளதேச தொழிலாளர்கள் பாயு டாமாய் போலீஸ் நிலையத்தை நோக்கி அணிவகுத்துச் செல்வதைக் காணும் வீடியோ அண்மையில் வைரலாகியுள்ளது.

அவர்கள் அனைவரும் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட அந்நிய தொழிலாளர்கள் போலி முகவர்களால் ஏமாற்றப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset