நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் அனைத்து மலேசியர்களிடையே  ஒற்றுமையைக் கொண்டு வரட்டும்: பிரதமர் அன்வார் 

புத்ராஜெயா:

நாட்டின் பொருளாதாரம், முதலீடு, வறுமையை ஒழித்தல் ஆகிய அம்சங்களில் நாடு தொடர்ந்து வளர்ச்சியடைய வேண்டும்.

அதற்கு நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் கூறினார்.

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டம் ஒருவருக்கொருவர் அன்பு, கருணை, புரிதல் ஆகியவற்றை வெளிப்படுத்த வேண்டும்.

மேலும் இனம், மதம், பின்னணியைப் பொருட்படுத்தாமல் பல்வேறு சமூகங்களிடையே நல்லெண்ணத்தைப் பரப்பவும் ஒரு உத்வேகமாக அமையும் என்று பிரதமர்  தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள். 

கிறிஸ்துவ சமூகம் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் அன்புக்குரியவர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடும் ஒரு நல்ல நாள்.

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் அனைத்து மலேசியர்களிடையே மகிழ்ச்சி, அமைதி, நல்லிணக்கம், செழிப்பு, ஒற்றுமையைக் கொண்டு வரட்டும் என்று பிரதமர் தனது 2023 கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தியில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset