நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிருஸ்துவ அன்பர்கள் அனைவருக்கும் பெருநாள் நல்வாழ்த்துகள்: டத்தோ நெல்சன் ரெங்கநாதன்

கோலாலம்பூர்:

இயேசு கிருஸ்துவின் பிறந்த நாளை கிருஸ்துமஸ் தினமாக உலகம் கொண்டாடுகிறது.

மலேசியாவில் வாழும் அனைத்து கிருஸ்துவ அன்பர்களுக்கும் எனது இதயம் கனிந்த கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்.

அன்பின் அர்த்தத்தையும் உண்மையின் தாத்பரியத்தையும் உலகுக்கு உணர்த்திய அவதாரம் இயேசு கிருஸ்து.  

இந்தத் திருநாளை முன்னிட்டு, உற்றார் உறவினர் மற்றும் சுற்றத்தாரின் தவறுகளை மன்னித்து அன்பு செலுத்துவது உன்னத பண்பு என டத்தோ டாக்டர் நெல்சன் தனது தகவல் ஊடக அறிக்கையில் தெரிவித்தார். 

பல்லின மக்கள் வாழும் நமது மலேசிய நாடு ஒரு புண்ணிய பூமி. இந்த மண்ணில் தான் அனைத்து இன மக்களின் பாரம்பரியமும், கலாச்சாரமும், சமய விழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து இன, சமய, மொழி, அரசியல் பேதம் கடந்து மலேசியர்கள் என்கிற ஒரே புள்ளியில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழும் நமது நாடு உலக நாடுகளுக்கு நல்லதொரு உதாரணம் என டத்தோ டாக்டர் நெல்சன் மேலும் தெரிவித்தார். .

ஆகவே, இந்த நாள் மட்டும் அல்லாமல், எந்நாளும் அன்பை மட்டுமே அதிகமாகப் பகிர்வோம் என தமது கிருஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் டத்தோ டாக்டர் நெல்சன் கேட்டுக் கொண்டார்.

மஇகா கல்விக் குழு தலைவரான டத்தோ டாக்டர் நெல்சன் அனைத்து மலேசியர்களுக்கும் தமது கிருஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset