செய்திகள் சிந்தனைகள்
ஈமான் விரும்புவது என்ன தெரியுமா..? - வெள்ளிச் சிந்தனை
‘நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கின்ற’ பாதையில் பொதுவாக மிகப் பெரும் தடையாக இருப்பது உயிர் மீதான, உடைமை மீதான, பொருள் மீதான பற்றும் பாசமும்தாம். உயிர்மீது யாருக்குத்தான் ஆசை இல்லை? பணம், பொருள் ஆகியவற்றின் தேவையே இல்லாதவர் யாராவது இருக்கின்றார்களா?
அசத்தியத்தை அசத்தியம் எனச் சொன்னால், குறிப்பாக அசத்தியத்தின் பிடியில் ஆட்சியும் அதிகாரமும் இருக்கின்ற போது, அசத்தியத்துக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பினால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று நினைத்தே குலைநடுங்கிவிடுகின்றான்.
எல்லா மட்டங்களிலும் அக்கிரமமும் கொடுமைகளும் கோலோச்சிக் கொண்டிருக்கின்ற போது அக்கிரமத்துக்கும் கொடுமைக்கும் எதிராகக் குரல் எழுப்புவதால் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ; உயிர் பறியோய்விடுமோ என்கிற நினைப்பே மனிதனை அச்சம் கொள்ளச் செய்துவிடுகின்றது.
உயிரைப் பறிகொடுக்கின்ற நிலையிலிருந்து தப்பித்துக்கொண்டாலும் பொருளாதார ரீதியாகப் பேரிழப்பைச் சந்திக்க நேரிடுமோ, பொருளாதாரச் சாவு நிகழ்ந்திடுமோ, அது உயிரிழப்பைக் காட்டிலும் பல வகைகளில் மிக மிகக் கொடுமையான நிலைமை அல்லவா என்கிற எண்ணங்களே மனிதனை நிலைகுலையச் செய்துவிடுகின்றன.
ஆனால்-
ஆனால் இந்த மாதிரியான அச்சங்களும் பயங்களும் நினைப்புகளும் இறைவன் மீது நம்பிக்கைகொண்டவர்களுக்கு ஒருபோதும் அழகு அல்ல.
இன்னும் சொல்லப் போனால் இது போன்ற எண்ணங்களுக்கு இடம் தருவதே இறைவன் மீதான நம்பிக்கை பலவீனமாகிவிட்டதற்கான சான்று ஆகும்.
வாழ்வும் சரி, வாழ்க்கைக்கான சாதனங்களும் சரி எவருடைய கைகளிலும் இல்லை. அவையெல்லாமே அல்லாஹ்வின் கைகளில்தாம் இருக்கின்றன.
ஒருவர் சத்தியத்தை வெளிப்படுத்தப் பயப்படுகின்றார் எனில் அவருடைய அந்த நடத்தை அவர் தம்முடைய உயிருக்கும் பொருளாதாரத்துக்கும் உரிமையாளராக மனிதர்களை நினைத்துக்கொண்டிருக்கின்றார் என்றே பொருள்.
அல்லது அல்லாஹ்வின் மீது எந்த அளவுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு அவர் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்றே அதற்குப் பொருள்.
இதன் காரணமாகத்தான் நபிகளார் (ஸல்) ‘உடல், உயிர், உடைமை போன்றவை தொடர்பான எல்லாவகையான அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாமல் அந்த அச்சங்களைப் பற்றிய கவலை கிஞ்சிற்றும் இல்லாமல் நன்மையை ஏவுங்கள்; தீமைகளைத் தடுங்கள்’ என்று கட்டளையிட்டார்கள்.
ஏனெனில் இறைவன் மீது நம்பிக்கை கொண்ட முஃமினிடம் - இறை நம்பிக்கையாளனிடம் - எதிர்பார்க்கப்படுகின்ற நடத்தையே அதுதான்.
- மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி (ரஹ்)
தமிழில்: லுத்ஃபுல்லாஹ்
தொடர்புடைய செய்திகள்
March 28, 2024, 6:48 am
இஸ்லாமிய வரலாற்றில் இன்று மறக்க முடியாத நாள்: நாம் பெற வேண்டிய படிப்பினை என்ன?
March 15, 2024, 7:40 am
ரமலான் வந்தது எதற்காக..? - வெள்ளிச் சிந்தனை
March 6, 2024, 12:21 pm
ஆரியத்தை வீழ்த்தி திராவிடத்தை காத்தவர்கள் குறித்து ஆளுநர் ரவியின் நச்சுக் கருத்துகள்
March 4, 2024, 10:50 pm
அம்பானி வீட்டு ஆடம்பர ப்ரீ வெட்டிங்! ரஜினியின் அறியாமையா? அருவெறுப்பா?
March 1, 2024, 3:28 am
உண்மையான வெற்றி என்ன தெரியுமா? - வெள்ளிச் சிந்தனை
February 23, 2024, 9:12 am
நிமிர்ந்து நில்..! - வெள்ளிச் சிந்தனை
February 16, 2024, 8:18 am
எங்கே நிம்மதி? - வெள்ளிச் சிந்தனை
February 9, 2024, 7:56 am
அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்லும் நபிமொழியும்..! - வெள்ளிச் சிந்தனை
February 2, 2024, 8:31 am
நன்றி செலுத்த வேண்டாமா...? - வெள்ளிச் சிந்தனை
January 19, 2024, 9:48 am