செய்திகள் மலேசியா
அமைச்சர் சரவணன் தலைமையில் 'மனிதவள மேம்பாட்டில் அடுத்த பரிணாமம்' மனித மூலதன மாநாடு
பாங்கி:
மலேசியக் குடும்பம் திட்டத்தின்கீழ் முன்னெடுக்கப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் தொழில் கல்வி பயிற்சித் திட்டத்தில் Lead Body தொழில் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா இன்று காலை பாங்கியில் நடந்தது.
மனித மூலதன மாநாட்டில் தலைமையேற்று பேசிய மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ சரவணன், குறிப்பிட்ட திறன் கொண்டவர்களை முதன்மையான பணியாளர்களாக உருமாற்றம் செய்யவும் அவர்களின் வருமானத்தை அதிகரிக்கக்கூடிய வழிமுறைக்கு Tvet முக்கிய பங்கு வகிக்கின்றது என்றார்.
2030 ஆம் ஆண்டிற்குள் 35% திறமையான பணியாளர்கள் அடையாளம் காண வேண்டுமென அரசாங்கத்தின் இலக்கை எட்டுவதற்கு இது பெரிதும் துணை புரிகின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.
'மனித வள மேம்பாட்டில் அடுத்த பரிணாமம்' எனும் கருப்பொருளில் HRDCORP ஏற்பாட்டில் இந்த மாநாடும் கண்காட்சியும் இன்று பாங்கியில் சிறப்பாக நடைபெற்றது.
“HRDCORP எப்போதும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தின் உந்து சக்தியாக இருக்கும் என்று தனது உரையில் தெரிவித்தார் சரவணன்.
HRD விருதுகள், NHCCE 2022
HRD விருதுகள் 2022, NHCCE 2022 உடன் இணைந்து மாபெரும் இரவு விருந்து நடைபெற உள்ளது.
இந்த விருதுகள் என்பது சிறந்த மனித வளங்களை அங்கீகரிக்கும் வருடாந்திர நிகழ்வாக அமையும்.
விருது பெறுபவர்கள் காலா டின்னரில் அறிவிக்கப்படுவார்கள்.
இந்த விருதுகளில் சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்கான HRD கார்ப் விருதும் அடங்கும்.
உற்பத்தி மற்றும் பெரும் முதலீட்டில் இயங்கும் நிறுவனங்களுக்கும் இந்த விருதளிப்பு நிகழ்வில் சிறப்பு செய்யப்பட உள்ளது. அதிலும் குறிப்பாக குவாரி மற்றும் மைனிங் தொழித்துறையை சேர்ந்தவர்களும் இந்தப் பிரிவில் அடங்குவர்
இதன் முத்தாய்ப்பாக மனிதவள அமைச்சர் விருது ஒன்றும் வழங்கப்பட உள்ளது.
NHCCE 2022 விருது வழங்கும் விழாவுக்கு பேராளர் பதிவுக்காக திறக்கப்பட்டுள்ளது. மாணவர் பேராளர்கள் RM200 செலுத்தி பதிந்து கொள்ளலாம்.
குழு அனுமதிக்கு RM1,350 (குறைந்தபட்சம் 3 பங்கேற்பாளர்கள்), அரசு ஊழியர் RM1,400 மற்றும் RM1,500 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
NHCCE 2022 மேல் விவரங்களுக்கு www.hrdcorp.gov.my/nhcce எனும் இணைய தளத்தை பார்க்கலாம்.
தொடர்புடைய செய்திகள்
March 29, 2024, 1:08 pm
பந்திங்கில் இறுதிசடங்கின் ஊர்வலத்தில் பட்டாசுகளை வெடிக்க செய்த ஆடவர் போலீசாரால் கைது
March 29, 2024, 12:34 pm
நாட்டில் 16 மாவட்டங்களில் 15 நாட்களுக்கு மேலாக மழை பெய்யவில்லை: நிக் நஸ்மி
March 29, 2024, 12:31 pm
உட்லண்டஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
March 29, 2024, 10:42 am
4 அரிய வகை வெள்ளை கிளிகள் பறிமுதல்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
March 29, 2024, 10:30 am
விரைவு பேருந்து தடம் புரண்டது: காராக் நெடுஞ்சாலையில் மோசமான நெரிசல்
March 29, 2024, 10:28 am
அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளின் விடுவிப்பை மீட்டெடுக்க மொஹைதின் முயற்சி
March 29, 2024, 10:26 am