நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றும்

சுங்கை சிப்புட்:

பேரா மாநிலத்தின் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றும் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் உறுதியுடன் கூறியுள்ளார்.

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணியின் தேர்தல் கேந்திரத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

பேரா மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ சாரணி முகமட், சுங்கை சிப்புட் தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஜுல்கிஃப்ளி ஹாரூண் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பேசிய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்,
சுங்கை சிப்புட் தேர்தல் கேந்திர விழா மிதமான அளவில் நடைபெறும் என எதிர்பார்த்தேன்.

ஆனால், இங்கு கூடியுள்ளவர்களை பார்க்கும் போது அந்நிலை மாறி விட்டது.
காரணம் எதிர்பாராத அளவிற்கு மக்கள் கூடி தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்கி உள்ளனர்.

இதனை பார்க்கும் போது வரும் பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றும் என்ற நம்பிக்கை எனக்கு தந்துள்ளதாக அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset