செய்திகள் மலேசியா
அரசாங்கம் காலம் தாழ்த்திவிட்டது: டான்ஸ்ரீ மொஹைதின் யாசின்
கோலாலம்பூர்:
தேசிய மீட்பு மன்றம் பொருளாதார மீட்சிக்காக முன்வைத்த பரிந்துரைகளை ஏற்றுச் செயல்படுத்துவதில் அரசாங்கம் காலம் தாழ்த்திவிட்டதாக அம்மன்றத்தின் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவே தேசிய மீட்பு மன்றம் உருவாக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஏற்கெனவே இம்மன்றம் 95 பரிந்துரைகளை அரசாங்கத்துக்கு அளித்ததாக கூறியுள்ளார்.
"அந்தப் பரிந்துரைகள் குறித்து கடந்த மே 12ஆம் தேதி ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையின் மூலம் கேள்வி எழுப்பி இருந்தேன். அதற்குப் பதிலளித்த பிரதமர் உரிய அமைச்சர்களுடன் கலந்து பேசி ஒரு முடிவு எடுப்பதாகக் கூறியிருந்தார்.
"ஆனால், நான்கு மாதங்களுக்கு முன்பே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பி இருக்க வேண்டும். அதனால் பிரதமரின் அறிவிப்பு எனக்கு வியப்பை ஏற்படுத்தியது.
"இவ்விவகாரத்தில் செய்யப்படும் தாமதம் என்பது ஏற்க இயலாத ஒன்று," என்று மொஹைதின் யாசின் தெரிவித்துள்ளார்.
தேசிய மீட்பு மன்றம் சார்பில் இதுவரை அரசாங்கத்திடம் 95 பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளது என்றும், அவற்றுள் 69 பரிந்துரைகள் சமூக, பொருளாதார விவகாரங்கள் தொடர்பானவை என்றும் குறிப்பிட்ட அவர் 86 பரிந்துரைகளுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துவிட்ட போதிலும், அவற்றுள் 16 பரிந்துரைகள் மட்டுமே முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார். மேலும் 30 பரிந்துரைகள் செயல்பாட்டுக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.
"நான் யாரையும் குறிப்பிட்டுக் குற்றம் சொல்ல விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை நாடு நல்ல நிலையில் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும் என்பதே எனது விருப்பம்," என்று டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் மேலும் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
April 18, 2024, 11:09 pm
சுங்கை பூலோ வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காண நேரடியாக களமிறங்குவேன்: டத்தோ ரமணன்
April 18, 2024, 7:55 pm
ஓரிரு ஆண்டுகளில் மலேசியாவின் முன்னேற்றம் கண்ட மாநிலமாக ஜொகூர் உருவெடுக்கும்: பிரதமர்
April 18, 2024, 7:54 pm
மூன்று நபர்களின் கைத்தொலைபேசிகளை எம்சிஎம்சி கைப்பற்றியது
April 18, 2024, 7:52 pm
மனைவியின் காதலனை கொன்றதாக பெலாச்சான் தொழிற்சாலை ஊழியர் மீது குற்றச்சாட்டு
April 18, 2024, 7:50 pm
விமான சேவை ரத்தானதால் 3 நண்பர்கள் வேலைக்காக ஜப்பான் திரும்ப முடியவில்லை
April 18, 2024, 7:49 pm
விமான சேவை ரத்தானதால் ஆயிரக்கணக்கான பயணிகள் கேஎல்ஐஏவில் சிக்கி தவித்தனர்
April 18, 2024, 7:47 pm
ஜொகூரில் பிரேக் பிடிக்காத பஸ் 11 வாகனங்களை மோதித் தள்ளியது
April 18, 2024, 5:55 pm