செய்திகள் வணிகம்
இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 50 லட்சம் டன் குறையும் என கணிப்பு
புது டெல்லி:
இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 40 லட்சம் டன் முதல் 50 லட்சம் டன் அளவுக்கு குறைய வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
நொய் அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதித்திருப்பது மற்றும் புழுங்கல் அரிசி தவிர்த்து பிற பாசுமதி அல்லாத அரிசிக்கு ஏற்றுமதி கட்டணம் விதித்தது போன்ற காரணங்களே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
உலகின் மொத்த அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு 40 சதவீதமாகும். 2021-22 நிதியாண்டில் இந்தியா 2.12 கோடி டன் அரிசியை ஏற்றுமதி செய்தது. இது முந்தைய ஆண்டைவிடக் கூடுதலாகும்.
2020-21 ஆம் நிதியாண்டில் இந்தியா 1.77 கோடி டன் அரிசி ஏற்றுமதி செய்தது.
கொரோனா பாதிப்புக்கு முன்பாக 2019-20-ஆம் நிதியாண்டில் 95 லட்சம் டன் அரிசியை மட்டுமே இந்தியா ஏற்றுமதி செய்தது.
நிகழ் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் 93.5 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
April 24, 2024, 12:21 pm
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸை வாங்க ஏர் ஆசியா உட்பட 6 முதலீட்டாளர்கள் போட்டி
April 21, 2024, 2:18 am
செரலாக்கில் அதிக சர்க்கரை இடுபொருள்: ஆய்வுக்கு இந்தியா பரிந்துரை
April 14, 2024, 8:11 am
மும்பை - கொழும்பு நேரடி விமானச் சேவையை தொடங்கியது இன்டிகோ
March 29, 2024, 12:15 pm
தமது 8-ஆவது கிளையை செந்தூலில் திறக்கின்றது இந்தியா கேட்
March 27, 2024, 6:45 am
இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு
March 26, 2024, 12:04 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
March 21, 2024, 9:32 am
காலுறை சர்ச்சை தொடர்பான நிறுவனத்தின் வணிக உரிமம் ரத்து
March 11, 2024, 11:35 am
அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பில் மாற்றம் இல்லை
March 8, 2024, 11:06 am
மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்ந்தது
March 7, 2024, 5:41 pm