செய்திகள் இந்தியா
குஜராத்தில் போதைப் பொருள் ஆலை கண்டுபிடிப்பு
மும்பை:
குஜராத்தின் அங்களேஸ்வர் பகுதியில், தடை செய்யப்பட்ட "மெஃபிட்ரான்' போதைப் பொருள் தயாரித்து வந்த ஆலையை மும்பை போலீஸார் கண்டறிந்தனர். அங்கிருந்து சுமார் ரூ.1,026 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து, மும்பை போலீஸின் போதைப் பொருள் தடுப்பு பிரிவு துணை ஆணையர் தத்தா நலவடே செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மும்பை அருகே நலசோபரா பகுதியில் மெஃபிட்ரான் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த ஆலை அண்மையில் கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக, 6 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். மேலும், ரூ.1,400 கோடி மதிப்பிலான 700 கிலோ மெஃபிட்ரான் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குஜராத்தின் அங்களேஸ்வர் பகுதியிலுள்ள மருந்து தயாரிப்பு ஆலையில் மெஃபிட்ரான் போதைப் பொருள் தயாரிக்கப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து, மும்பை போலீஸின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர், அந்த ஆலையில் அதிரடி சோதனை நடத்தி, அதன் உரிமையாளர் கிரிராஜ் தீக்ஷித்தை கைது செய்தனர். மேலும், 513 கிலோ எடையுள்ள ரூ.1,026 கோடி போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
March 29, 2024, 1:50 pm
குறைந்தது 50 முஸ்லிம்களுக்கு வாய்ப்பு தாருங்கள்: காங்கிரஸ் தலைவரிடம் முஸ்லிம் அமைப்பு கோரிக்கை
March 28, 2024, 1:36 pm
போட்டியிட வாய்ப்பு மறுப்பு: வருண் காந்திக்கு காங்கிரஸ் அழைப்பு
March 28, 2024, 1:21 pm
கேஜரிவால் கைது: நியாயமான விசாரணைக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
March 25, 2024, 11:51 pm
3 IDIOTS உண்மை நாயகனின் லடாக் உண்ணாவிரதத்துக்கு பெருகும் ஆதரவு
March 25, 2024, 4:08 pm
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
March 24, 2024, 6:55 pm
அரவிந்த் கேஜ்ரிவால் கைதை கண்டித்து மார்ச் 31இல் ‘இண்டியா’ கூட்டணி மாபெரும் பேரணி
March 24, 2024, 5:06 pm
4 ஆவது வகுப்பு படிக்கும் உத்ரா ஜானகியின் முதல் நோன்பு
March 23, 2024, 4:11 pm
திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவின் வீட்டில் சிபிஐ சோதனை
March 23, 2024, 10:46 am
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை காவல் விசாரணை
March 22, 2024, 12:42 pm