செய்திகள் கலைகள்
யுவனின் கலையிரவுக்கான 2ஆவது நிகழ்ச்சி அறிவிப்பை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் வெளியிட்டது
எனது பல பிரபல பாடல்கள் மலேசிய மண்ணில் உதித்தவை!
எனக்கும் மலேசியாவுக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது - யுவன்
கோலாலம்பூர்:
யுவன் சங்கர் ராஜாவின் ஜூலை கலையிரவுக்கான டிக்கெட்டுகள் 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தன என்று மாலிக் ஸ்ட்ரீம்ஸ் குழுமத்தின் தலைவர் டத்தோ அப்துல் மாலிக் கூறினார்.
மாலிக் ஸ்ட்ரீம்ஸ் குழுமத்தின் ஏற்பாட்டில் யுவன் சங்கர் ராஜா கலையிரவு வரும் ஜூலை மாதம் 16 ஆம் தேதி புக்கிட் ஜலீல் உள்ளரங்கில் நடைபெறவுள்ளது.
ஒரு நாளைக்கு நடைபெறுவதாக இருந்த இந்த கலையிரவு தற்போது இரண்டு, மூன்று நாட்கள் நடைபெறவுள்ளதாக டத்தோ மாலிக் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறினார்,
காரணம் யுவன் கலையிரவை பார்க்க வேண்டும் என மலேசியாவில் உள்ள அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
இதனால் முதல் கலையிரவுக்கான 9 ஆயிரம் டிக்கெட்டுகளை 2 மணி நேரத்திற்குள் அவரின் ரசிகர்கள் வாங்கி முடித்து விட்டனர்.
இதன் அடிப்படையில் இரண்டாவது இசை நிகழ்ச்சியை யுவனின் ரவுடி பேபி நைட் எனும் பெயரில் அதே அரங்கில் அடுத்த நாள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கலையிரவு 2ஐ தொடர்ந்து ஜோகூர் மக்களுக்காக மூன்றாவது நிகழ்ச்சி நடத்துவதற்கான முடிவை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் எடுத்துள்ளது என்றும் டத்தோ மாலிக் தெரிவித்தார்.
ஜூலை 16, 17ஆம் தேதிகளில் யுவன் கலையிரவு புக்கிட் ஜாலில் அக்ஸிதா அரங்கில் நடைபெறவுள்ளது.
அதே வாரத்தில் ஜொகூரில் மூன்றாவது நிகழ்ச்சி ஜொகூரில் நடத்தப்படவுள்ளது.
கோவிட்-19 தொற்றின் தாக்கத்திற்கு பின் பல வியாபாரங்கள் ஒன்றுமில்லாமல் ஆகிப் போயின. குறிப்பாக சுற்றுலாத்துறை சார்ந்த தொழில்கள் நலிவடைந்தன. இதுபோன்ற கலைநிகழ்ச்சிகள் மூலம் அவை தொடர்பான இதர வர்த்தகங்களும் நடைபெறும். பலருக்கு வேலை வாய்ப்பும் வியாபாரமும் நடக்கும் என்று டத்தோ மாலிக் இந்த நிகழ்ச்சி குறித்து கூறினார்.
யுவன் தனது இசையுலகில் அவர் அடியெடுத்து வைத்து 25 ஆண்டுகள் ஆனதை ஒட்டி தனது இசைப் பயணத்தை தொடங்கியுள்ளார்.
முதல் கட்டமாக மலேசியாவிற்கு அவர் வருகிறார். மலேசியாவைத் தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மன், துபாய் ஆகிய நாடுகளில் யுவனின் கலையிரவுகள் நடைபெறவுள்ளது.
இசைஞானி இளையராஜாவின் புதல்வரான யுவனின் கலையிரவை நேரடியாக காண உலகளாவிய மக்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோ அப்துல் மாலிக் கூறினார்.
ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வித்தியாசமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக யுவன் சங்கர் ராஜா தெரிவித்தார்,
தனக்கும் மலேசியாவுக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது என்றும் தனது இசையில் பிரபலமான பல பாடல்களின் ட்யூன்கள் மலேசிய மண்ணில் பிறந்தவை என்று கூறினார்.
மலேசிய கலை இரவில் முன்னணி பாடகர்கள் பாட இருக்கிறார்கள். துவக்க கால எனது பாடல்களும் அதில் இருக்கும்; புதிய பாடல்களும் இருக்கும் என்றார் அவர்.
பாடலாசிரியர் முத்துக்குமார் என் உள்ளத்திற்கு மிக நெருக்கமானவர். அவரும் வாலியும் எனக்கு அருமையான பாடல்களை தந்துள்ளார்கள். எனது மலேசிய நிகழ்ச்சியில் உள்ளூர் பாடகர்களும் பாடுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
March 29, 2024, 10:22 am
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் நடிகர் சூர்யா
March 29, 2024, 10:18 am
இயக்குநர் லோகேஷின் தலைவர் 171 படத்தின் தலைப்பு ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகிறது
March 27, 2024, 12:30 pm
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என் தாய் வீடு போன்றது: இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
March 27, 2024, 10:44 am
நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்
March 23, 2024, 4:03 pm
தமிழ்நாடும் கேரளாவும் எனக்கு இரு கண்கள் கேரள ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு
March 23, 2024, 12:06 pm
லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசனின் ‘இனிமேல்’ ஆல்பம் டீசர் வெளியீடு!
March 22, 2024, 11:37 pm
Behindwoods திரைப்பட தயாரிப்பில் களமிறங்குகிறது
March 22, 2024, 4:53 pm
படை தலைவனுக்குப் பக்க பலமாகும் ராகவா லாரன்ஸ்
March 21, 2024, 10:49 am
இளையராஜா வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத் துவக்க விழா
March 20, 2024, 4:41 pm