நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாயும், மகனும் தூக்கிலிட்டு மாண்டனர்: ரவாங் குண்டாங்கில் சம்பவம்

ரவாங்:

தாயும், மகனும் தூக்கிலிட்டு மாண்ட சம்பவம் ரவாங் கம்போங் பாரு குண்டாங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தகவல் கிடைத்ததும் போலீஸ் அதிகாரிகள் காலை 10.17 மணிக்கு சம்பவ நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அவ்வீட்டில் இருவர் தூக்கில் தொங்கியப்படி இருந்தனர். உடனே அதிகாரிகள் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கினர்.

போலீஸ் அதிகாரிகள், தடவவியல் நிபுணர்களும் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் முழுமையான சோதனைகளை நடத்தினர்.

அதில் குற்றவியல் சம்பவங்கள் ஏதும் தென்படவில்லை.

உடனே அவர்களின் உடல்களை மீட்டு சுங்கைபூலோ மருத்துவமனைக்கு சவபரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

இதில் 71 வயது தாயும் 35 வயது மகனும் மரணமடைந்துள்ளனர் என்று கோம்பாக் மாவட்ட போலீஸ்படைத் தலைவர் ஏசிபி ஜைனால் முஹம்மத் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset