செய்திகள் மலேசியா
மக்கள் விரும்பினால் தேர்தல் களம் காண்பேன்: ஸுல்கிஃப்ளி அஹ்மத்
கோலாலம்பூர்:
மக்கள் விரும்பினால் தேர்தலில் போட்டியிட தாம் தயாராக இருப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் ஸுல்கிஃப்ளி அஹ்மத் தெரிவித்தார்.
Tasek Gelugor தொகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மீன்கள் விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், Tasek Gelugor நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடத் தயார் என்றார்.
"எனினும், மக்கள் அழைத்தால் மட்டுமே தேர்தல் களம் காண்பேன். உண்மையில் நான் தீவிர அரசியலில் இல்லை. மேலும், எந்தவொரு அரசியல் கட்சியின் உறுப்பினரும் அல்ல.
"ஒருவேளை Tasek Gelugor தொகுதி மக்கள் தேர்தலில் போட்டியிட அழைத்தால் அதற்கு மறுப்பு தெரிவிக்க மாட்டேன். அதே சமயம் தேர்தலில் போட்டியிட்டாலும், இல்லாவிட்டாலும் Tasek Gelugor தொகுதி மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றி வருவேன். ஏனெனில், இது எனது சொந்த ஊர் ஆகும்," என்றார் ஸுல்கிஃப்ளி அஹ்மத்.
நேற்றைய நிகழ்வில் சுமார் ஆயிரம் பேருக்கு 1.2 டன் (ikan kembung - mackerel) மீன்களை அவர் விநியோகித்தார்.
தொகுதி மக்களுக்கு மட்டுமல்லாமல், அவ்வழியே சென்ற பொதுமக்களுக்கும் ஒரு கிலோ எடை கொண்ட மீன் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டன.
கடந்த 2016, ஆகஸ்ட் 1ஆம் தேதி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார் ஸுல்கிஃப்ளி அஹ்மத்.
எனினும், 14ஆவது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்று, 2018 மே மாதம் ஆட்சி அமைத்ததும் அவர் அப் பதவியில் இருந்து விலகினார்.
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 7:10 pm
மும்மொழி அகராதி மாணவர்களுக்கு பெரும் பலனைத் தரும்: மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி
April 25, 2024, 7:06 pm
உலு சிலாங்கூரில் 324 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டணம்: மந்திரி புசார் வழங்கினார்
April 25, 2024, 5:12 pm
கோல குபு பாருவில் பெண் திட்டத்திற்கான முகப்பிடம்; இந்திய பெண்கள் பயன் பெற வேண்டும்: டத்தோ ரமணன்
April 25, 2024, 4:40 pm
முன்னாள் பிரதமர் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்கிறேன்: பிரதமர் அன்வார்
April 25, 2024, 4:39 pm
துன் மகாதீர் மற்றும் அவரின் இரு மகன்கள் மீதான விசாரணை நடந்து வருகிறது: அசாம் பாக்கி
April 25, 2024, 4:38 pm
ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் வாங்கியது தொடர்பான விசாரணை இன்னும் தொடர்கிறது: அசாம் பாக்கி
April 25, 2024, 3:51 pm
கோல குபு பாரு தேர்தலை மஇகா புறக்கணிக்கிறது என்பதும் பொய்யாகி விட்டது: டத்தோ ரமணன் சாடல்
April 25, 2024, 2:53 pm