செய்திகள் சிந்தனைகள்
கால் நூற்றாண்டாக துரத்துகிற கேள்விகள்..! - அலிஜா இஸத்பெகோவிச்
கேள்விகள் வழிகாட்டும்.
கேள்விகள் உணர்வூட்டும்.
கேள்விகள் சீர் செய்யும்.
கேள்விகள் அழகூட்டும்.
நம்முடைய ஆளுமையைச் செதுக்குவதும் கேள்விகளே!
நம்முடைய வாழ்க்கையை நெறிப்படுத்துவதும் கேள்விகளே!
சிந்தனையைச் சீர்படுத்துவதும் கேள்விகளே!
நடத்தையைத் திருத்தக்கூடியதும் கேள்விகளே!
பாதைகளைப் புலப்படுத்துவதும் கேள்விகளே!
ஒரு மாபெரும் இஸ்லாமியப் போராளி எழுப்பிய கேள்விகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய மகத்தான இஸ்லாமிய அறிஞர்களில் அவரும் ஒருவர்.
பன்மை சமூகத்தில் முஸ்லிம்கள் எப்படி வாழ வேண்டும்? என்கிற கேள்விக்கு விடையாக வாழ்ந்து காட்டியவர் அவர். ஆனானப்பட்ட பில் கிளிண்டன் போன்றவர்களை இராஜதந்திரத்தில் வென்று காட்டியவர். Islam Between East and West என்கிற பெயரில் அவர் எழுதிய நூல் இன்று வரை அந்தத் தலைப்பில் எழுதப்பட்ட தன்னிகரற்ற நூலாக மிளிர்கின்றது.
சிந்தனையாளர்; பன்னூலாசிரியர்; போர்ப்படைத் தளபதி; இராஜதந்திரி; தேசச் சிற்பி; மக்கள் தலைவர்; ஆட்சியாளர் என அவருடைய ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
போஸ்னிய மக்களால் ‘டிடோ’ (பெரியார்) என்று அன்போடு அழைக்கப்பட்டவர் அவர்.
யார் அவர்?
சரியாகச் சொன்னீர்கள். போஸ்னிய அதிபர் *அலிஜா இஸத்பெகோவிச்* தான் அந்த மகத்தான மனிதர்.
8 ஆகஸ்டு 1925 அன்று பிறந்த அலிஜா இஸத்பெகோவிச் 19 அக்டோபர் 2003 அன்று இறைவனிடம் மீண்டார்.
ஆனால் அவர் விழா ஒன்றில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தை நோக்கி தொடுத்த கேள்விகள் இன்று வரை விடையைத் தேடி நிற்கின்றன.
அவர் எழுப்பிய அந்தக் கேள்விகள் முக்கியமானவை. கனமானவை.
இறைநம்பிக்கையாளர்களின் தூக்கத்தைப் பறிக்கக் கூடியவை. சிந்தனையைத் தூண்டிவிட்டு செயற்களத்தில் தள்ளி விடுபவை.
அந்தக் கேள்விகளின் விவரம் வருமாறு:
*(1)* “இக்ரா” என்கிற கட்டளையுடன் தான் இஸ்லாமிய வரலாறு தொடங்கியது. கல்வியறிவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் அறவுரைகளை குர்ஆனிலும் நபிமொழிகளிலும் அதிகமாகப் பார்க்க முடியும். இருந்தாலும், முஸ்லிம் சமுதாயம் கல்வித்துறையில் பின் தங்கி இருக்கின்றதே, அதற்குக் காரணம் என்ன?
*(2)* நேரந்தவறாமை என்கிற அழகிய நடத்தையை இஸ்லாம் மிக அதிகமாக வலியுறுத்தி இருக்கின்றது. தொழுகை, நோன்பு, ஹஜ் என எல்லா வணக்கங்களுக்கும் குறிப்பிட்ட நேரம் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் முஸ்லிம்களோ நேரத்தின் மதிப்பு தெரியாதவர்களாக இருக்கின்றார்களே! நேரத்தை வீணடிப்பவர்களாக இருக்கின்றார்களே! இதற்குக் காரணம் என்ன?
*(3)* தூய்மையை நம்பிக்கையின் பாதியாக இஸ்லாம் அறிவித்துள்ளது. தூய்மையற்ற நிலையில் எந்தவொரு வணக்கத்தையும் நிறைவேற்றி விட முடியாது. இருந்தாலும் முஸ்லிம் முஹல்லாக்கள் அசுத்தமானவையாக இருப்பது ஏன்?
*(4)* ஏகத்துவத்தையும் சமூக ஒற்றுமையையும் இஸ்லாம் மிக அதிகமாக வலியுறுத்தி இருக்கின்றது. இருந்தாலும், முஸ்லிம்களிடையே சண்டைகளும் சச்சரவுகளும் பிளவுகளும் பிணக்குகளும் அதிகமாக மிகைத்தோங்கி இருப்பது ஏன்?
1995 அன்று ஆகஸ்டு மாதத்தில் கெய்ரோவில் ஃபைஸல் விருது பெற்றவர்களுக்காக நடந்த பாராட்டு விழாவில் தான் அலிஜா இஸத்பெகோவிச் அவர்கள் இந்தக் கேள்விகளை எழுப்பினார். இவற்றுக்கு விடை காண்பவர்களுக்கு இஸ்லாமிய சேவைக்கான ஃபைஸல் விருதைக் கொடுக்கலாம் என்று பரிந்துரைத்தார், அலிஜா.
கால் நூற்றாண்டாக துரத்துகிற கேள்விகள் தாம் இவை...
மொழியாக்கம்: லுத்ஃபி
தொடர்புடைய செய்திகள்
March 28, 2024, 6:48 am
இஸ்லாமிய வரலாற்றில் இன்று மறக்க முடியாத நாள்: நாம் பெற வேண்டிய படிப்பினை என்ன?
March 15, 2024, 7:40 am
ரமலான் வந்தது எதற்காக..? - வெள்ளிச் சிந்தனை
March 6, 2024, 12:21 pm
ஆரியத்தை வீழ்த்தி திராவிடத்தை காத்தவர்கள் குறித்து ஆளுநர் ரவியின் நச்சுக் கருத்துகள்
March 4, 2024, 10:50 pm
அம்பானி வீட்டு ஆடம்பர ப்ரீ வெட்டிங்! ரஜினியின் அறியாமையா? அருவெறுப்பா?
March 1, 2024, 3:28 am
உண்மையான வெற்றி என்ன தெரியுமா? - வெள்ளிச் சிந்தனை
February 23, 2024, 9:12 am
நிமிர்ந்து நில்..! - வெள்ளிச் சிந்தனை
February 16, 2024, 8:18 am
எங்கே நிம்மதி? - வெள்ளிச் சிந்தனை
February 9, 2024, 7:56 am
அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்லும் நபிமொழியும்..! - வெள்ளிச் சிந்தனை
February 2, 2024, 8:31 am
நன்றி செலுத்த வேண்டாமா...? - வெள்ளிச் சிந்தனை
January 19, 2024, 9:48 am