செய்திகள் சிந்தனைகள்
ஓ! வெளிச்சத்தின் உறவுக்காரர்களே! - ரமலான் சிந்தனைகள்
பண்பட்ட சொற்களை ஆள்வது இலக்கியத் துறையின் தனிக் கலை..!
"நோயாளி " என்று கூறுவதைவிட "ஆரோக்கியத்தை நாடுபவர்", என்று கூறலாம்.
"குருடர்" என்று கூறுவதை விட "மாற்றுத்திறனாளி ", என்று கூறலாம்.
"ஒற்றைக்கண் கொண்டவர் " என்று சொல்வதைவிட "மேன்மையான கண் கொண்டவர்" என்று கூறலாம்.
ஒரு முறை கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்கள் தமது அரண்மனையில் கொட்டிக் கடந்த மூங்கில் குவியலைப் பற்றி விசாரித்தார். அதற்கு அமைச்சர் ஃபஸ்ல் பின் ரபீஃ, "கலிஃபா அவர்களே!
"வில் அம்பின் நார்கள்தாம்" அவை என்று பதிலளித்தார்.
மூங்கிலைச் சுட்டுகின்ற "கீர்ஸான் - خيرزان" என்ற சொல்லை அமைச்சர் சொல்லவில்லை. ஏனெனில் கலீஃபா அவர்களின் தாயாரின் பெயரும் கீர்ஸான் ஆக இருந்தது. எனவே அமைச்சர் இடமறிந்து பேசினார்.
ஒருமுறை ஒரு அரசர் அரபுமொழியில் தமது மகனிடம் மிஸ்வாக் என்ற சொல்லின் பன்மை எதுவென வினவினார். அதன் பன்மை "மஸாவீக் - مساويك" என்பதாகும். ஆனால் அந்தச் சொல்லுக்கு ‘உன்னுடைய குறைகளும் இழிவுகளும்’ என்கிற பொருளும் இருந்தது.
தந்தை தன்னை சோதிப்பதற்காக கேட்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட மகன் சமயோசிதமாக மாற்றிச் சொன்னார். "மஸாவீக்" என பதிலளிக்காமல், "உங்களின் முழுமையான குணங்களுக்கு எதிரான ஒன்று" என்று கூறினார்.
அமீருல் மூமினீன் உமர் பின் அல்கத்தாப்(ரலி) அவர்கள் ஒருமுறை நகர் வலம் வருகிற பொழுது ஓரிடத்தில் மக்கள் சிலர் தீயை மூட்டி வைத்து அதனைச் சுற்றிலும் அமர்ந்திருப்பதைப் பார்த்தார்கள். "நெருப்பை மூட்டி அமர்ந்திருப்பவர்களே!" என அவர்களை விளிப்பதற்குப் பதிலாக, "வெளிச்சத்தில் அமர்ந்து இருப்பவர்களே!" என்று இங்கிதத்துடன் சபை ஒழுக்கத்தைப் பேணி கூறினார்கள்.
ஏனெனில், அரபுமொழியில் நெருப்பு - نار என்பதற்கு நரகம் என்ற பொருளும் உண்டு. அதனால் அந்தச் சொல்லைப் பயன்படுத்தினால் நரகவாசிகள் என்கிற பொருள் மயக்கம் ஏற்படக் கூடிய சாத்தியம் இருந்தது. அதனால் அவ்வாறு சொல்வதை தவிர்த்து நேர்மறையான பொருள் தருகின்ற விதத்தில் அந்த மக்களை விளித்தார்கள்.
ஒரு முறை அப்பாஸ்(ரலி) அவர்களிடம் "நீங்கள் பெரியவரா ? அல்லது இறைத்தூதர் ﷺ அவர்கள் பெரியவரா ?" என்று கேட்கப்பட்ட பொழுது, "இறைத்தூதர் ﷺ அவர்கள்தாம் பெரியவர். நான் அவர்களுக்கு முன்பாக பிறந்து விட்டேன்" என்று பதிலளித்தார்கள்.
என்ன அருமையான சொல்லாடல்கள்!
இன்று நமது சமூகத்தில் தொலைந்து போன பொக்கிஷங்கள்..!
பிறர் உள்ளத்தைக் காயப் படுத்துவதற்கும் அவர் அன்பைப் பெறுவதற்கும் இடையில் "சொல்லும் விதம்" என்ற ஒரு மெல்லிய கயிறு அறுபடாமல் இருக்கிறதா என்று நம்மை நாமே சோதித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அரபு மொழியில் பதிவு செய்யப்பட்ட ட்விட்டர் பக்கத்திலிருந்து....
- தமிழில்: உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி
தொடர்புடைய செய்திகள்
March 28, 2024, 6:48 am
இஸ்லாமிய வரலாற்றில் இன்று மறக்க முடியாத நாள்: நாம் பெற வேண்டிய படிப்பினை என்ன?
March 15, 2024, 7:40 am
ரமலான் வந்தது எதற்காக..? - வெள்ளிச் சிந்தனை
March 6, 2024, 12:21 pm
ஆரியத்தை வீழ்த்தி திராவிடத்தை காத்தவர்கள் குறித்து ஆளுநர் ரவியின் நச்சுக் கருத்துகள்
March 4, 2024, 10:50 pm
அம்பானி வீட்டு ஆடம்பர ப்ரீ வெட்டிங்! ரஜினியின் அறியாமையா? அருவெறுப்பா?
March 1, 2024, 3:28 am
உண்மையான வெற்றி என்ன தெரியுமா? - வெள்ளிச் சிந்தனை
February 23, 2024, 9:12 am
நிமிர்ந்து நில்..! - வெள்ளிச் சிந்தனை
February 16, 2024, 8:18 am
எங்கே நிம்மதி? - வெள்ளிச் சிந்தனை
February 9, 2024, 7:56 am
அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்லும் நபிமொழியும்..! - வெள்ளிச் சிந்தனை
February 2, 2024, 8:31 am
நன்றி செலுத்த வேண்டாமா...? - வெள்ளிச் சிந்தனை
January 19, 2024, 9:48 am